WhatsApp Channel
வங்கதேசம், மொரீஷியஸ், பாகிஸ்தான், பூடான் ஆகிய நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வெங்காயத்தின் விலை அவ்வப்போது பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, நுகர்வோரின் சிரமத்தைப் போக்க விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, உள்நாட்டு சந்தையில் வெங்காயம் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்படுத்தவும் 2024 மார்ச் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் அண்டை நாடுகளில் வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால், தங்கள் நாட்டுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு அண்டை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், வங்கதேசம், மொரீஷியஸ், பாகிஸ்தான், பூடான் ஆகிய நான்கு நாடுகளுக்கு 54 ஆயிரத்து 760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வங்கதேசத்துக்கு 50 ஆயிரம் டன் வெங்காயமும், மொரீஷியஸுக்கு 1,200 டன் வெங்காயமும், பாகிஸ்தானுக்கு 3 ஆயிரம் டன் வெங்காயமும், பூடானுக்கு 560 டன் வெங்காயமும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
Discussion about this post