WhatsApp Channel
மேற்கு வங்கத்தில் ரேஷன் முறைகேடு தொடர்பாக ஷேக் ஷாஜகானுடன் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலங்களில் உணவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அப்போது, ரேஷன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ஜோதிபிரியா மல்லிக்கைக் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா, சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்த சென்றபோது, அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஷேக் ஷாஜகான் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஷேக் ஷாஜகானை வரும் 29ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post