WhatsApp Channel
தென்னாபிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், இந்தத் தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை சென்னையில் சந்திக்கிறது. பாகிஸ்தான் 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா 9 ரன்களிலும், இமாம் உல் ஹக் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து கேப்டன் பாபருடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தார். ஓரளவு அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இப்திகார் அகமது 21 ரன்கள் எடுத்து சிக்சர் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 141 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பிறகு, சவுத் ஷகீல் மற்றும் ஷதாப் கான் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. சவுத் ஷகீல் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார், ஷதாப் கான் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பான தொடக்கம் இருந்தும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாபிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கும்.
Discussion about this post