WhatsApp Channel
திமுக எம்.பி.,யுடன் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், நட்சத்திர ஓட்டல்கள், மதுபான ஆலைகள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சொத்துக்குவிப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான ரூ.88 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கனவே முடக்கியது. இந்நிலையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய முக்கிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி அகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவரது வீட்டின் பின்புறம் பாரத் பல்கலைக்கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம் இயங்கி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், எஸ்.ஜே.ஜே., நிறுவனத்தின் அலுவலகமும், பள்ளி நிர்வாக அலுவலகமும் ஒரே முகவரியில் இயங்கி வருகின்றன. அந்த இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவரது கல்வி நிறுவனங்களில் எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர், அவர்களிடமிருந்து எவ்வளவு நன்கொடை கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது சரியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அடையாறில் உள்ள அவரது வீட்டில் ரூ.2000, ரூ.500 நோட்டுகளை (ரூ.2 கோடி) அதிகாரிகள் பறிமுதல் செய்து இயந்திரம் மூலம் எண்ணி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், ஆவணங்களுடன் இருந்த பெண்ணை அதிகாரிகள் அடையாறு இல்லத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அடுத்தடுத்து ரகசிய அறை உள்ளதா? என்ற கோணத்தில் பெண் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இவருக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஜெகத்ரட்சகனின் மற்றொரு வீட்டில் லாக்கரை திறக்க வருவாய்த்துறையினர் சாவியுடன் ஊழியர்களை அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. அலுவலக கணினி, ‘ஹார்டு டிஸ்க், பென் டிரைவ்’ போன்ற ‘டிஜிட்டல்’ ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். ஜெகத்ரக்ஷகன் நிறுவனத்தின் சொகுசு காரில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் முறையாக கணக்கு தாக்கல் செய்யாத புகார்கள் தொடர்பாக இந்த விசாரணை நடக்கிறது. முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால் விரைவில் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Discussion about this post