WhatsApp Channel
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்களை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் நடந்து வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று 15வது நாளாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. பதக்கப் பட்டியலில் 4வது இடத்திலும் உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது;
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவின் இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதையும், 10ஆம் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Discussion about this post