WhatsApp Channel
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 169 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவமும் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் 5வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காஸா மீது வான்வழி தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல்களை அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தெற்கு இஸ்ரேலில் அதிக படைகளை நிறுத்தியுள்ளது. ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,055 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர். காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் இதுவரை 950க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளன; சுமார் 5,000 பேர் காயமடைந்தனர்.
எரிபொருள் தீர்ந்துபோகும்: காஸாவின் ஒரே இயங்கு மின் உற்பத்தி நிலையத்தில் சில மணிநேரங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் என்று கூறப்படுவதால் காசா நகரம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள அதிகாரிகள், “எரிபொருள் தீர்ந்து போனதால் சில மணி நேரங்களுக்குள் மின் உற்பத்தி நிலையம் முழுவதுமாக மூடப்படும் அபாயம் உள்ளது” என்றார்.
சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் காசா மருத்துவமனைகள் அழுத்தத்தில் உள்ளன. இதனால், போரில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.நா ஊழியர்கள் பலி: பாலஸ்தீன அகதிகளுக்கான காசா மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 9 ஐ.நா ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
லெபனான் தாக்குதலுக்கு பதிலடி: லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், லெபனானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளது.
காசா நகரில் இருந்து 1.87 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்: அகதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1,87,500 பேர் காசா நகரை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 1,37,00 பேர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்கியுள்ளனர். காசா நகரில் உள்ள 790 குடியிருப்புகள் தரை மட்டத்தில் உள்ளன. 5,330 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா நகருக்கான தண்ணீர், உணவு மற்றும் மருந்து விநியோகம் தடைபட்டுள்ளது. ஏராளமானோர் அப்பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எரிபொருள், மின்சாரம், தண்ணீர், மருந்துகள் இல்லாமல் மருத்துவமனைகள் இயங்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்” என்றார்.
ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் வால்கர் டர்க் கூறுகையில், “காசா நகரம் அடிப்படை சேவைகளை இழந்து தவிக்கிறது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைவாக பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்படக் கூடாது. “இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு எதிரானது.
ஹமாஸின் 30,000 உறுப்பினர்கள்: ஹமாஸில் தோராயமாக 30,000 உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. காசா நகரின் பதுங்கு குழிகளில் இருந்து இஸ்ரேலை நோக்கி அவர்கள் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகின்றனர். ஹமாஸை ஆதரிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குழுக்கள் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளை குறிவைக்கின்றன. மேலும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தொடர்ந்து இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்து வருகின்றனர்.
இஸ்ரேலின் முப்படைகளிலும் 1.73 லட்சம் ஆண்கள் மற்றும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் போரில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ராணுவப் பயிற்சி பெற்ற இளைஞர், யுவதிகள் 4.65 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 3 லட்சம் பேர் போரில் பங்கேற்பதற்காக வரைவு செய்யப்பட்டுள்ளனர்.
Discussion about this post