WhatsApp Channel
போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை வாங்கி சோதனை செய்தபோது, எதிர்பாராதவிதமாக தோட்டா வெடித்து சிதறியது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் இஷ்ரத். அவர் சவுதி அரேபியாவிற்கு இஸ்லாமிய புனித யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பித்திருந்தார்.
இதற்கிடையில், அலிகாரில் உள்ள காவல் நிலையத்தில் இஷ்ரத்தின் பாஸ்போர்ட் சரிபார்க்கப்பட்டது.
இந்நிலையில், பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக அலிகார் காவல் நிலையத்திற்கு நேற்று இஷ்ரத் சென்றிருந்தார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா துப்பாக்கியை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் மனோஜ் வைத்திருந்த துப்பாக்கி திடீரென சுட்டது. இதில் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு வந்திருந்த இஷ்ரத் தலையில் குண்டு வீசப்பட்டது. உடனே அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக போலீசார் இஷ்ரத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா தலைமறைவானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Discussion about this post