WhatsApp Channel
திமுக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் சென்னை மக்கள் மீது அக்கறை இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு அரசின் அலட்சியமே காரணம். பெரும்பாலான பகுதிகளில் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. புயல் பாதிப்பால் திமுக ஆட்சியில் முன்கூட்டியே அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.
மண்டல வாரியாக அதிகாரிகளை அரசு முறையாக நியமித்து அறிவுரை வழங்கவில்லை. 20,000க்கும் மேற்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். திமுக மாநாடு நடந்த நேரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை பார்த்திருந்தால் தண்ணீர் தேங்கியிருக்காது.
மழை பெய்தால் ஒரு துளி கூட மிச்சம் இருக்காது என அரசு கூறியும் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிகால் பணிகளை நாங்கள் அரசியலாக்கவில்லை. திமுக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் சென்னை மக்கள் மீது அக்கறை இல்லை. அதிமுக ஆட்சியில் வடிகால் திட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post