WhatsApp Channel
டெல்லி மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கவிதாவை அமலாக்க இயக்குனரகம் நேற்று கைது செய்தது.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், தெலுங்கானா மேல்சபை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டாக சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுக்கொள்கை மீறல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்.
Discussion about this post