WhatsApp Channel
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று திடீரென 700 புள்ளிகள் சரிந்து 66,900.90 புள்ளிகளாக உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கிய பின், மதியம் திடீரென வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது.
இதன் காரணமாக, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், மாருதி, டைட்டன், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. ஹெச்டிஎப்சி வங்கி 3 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இருப்பினும், என்டிபிசி, இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி குறியீடு 19,500 புள்ளிகளுக்கு கீழே தொட்டுள்ளது. சியோல், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின.
Discussion about this post