WhatsApp Channel
பொதுவாக இது சுக்ர க்ரஹத்தின் ஆட்சி வீடு என்பதால் வீடு,வண்டி,பால் பாக்கியங்களைக் கொண்டு வசதியுடன் இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு இவர்களுக்கு இருக்கும்.தெய்வ வழிபாடுகளுடன் விளங்குவார்கள்.அதிகமாகப் பிறருடன் நெருங்கிப் பழக மாட்டார்கள்.தங்கள் குடும்பத்தை விட்டு மற்றவர் விவகாரங்களில் தலை இட மாட்டார்கள்.துலா ராசியில் பிறந்த ஆண்கள் சிலருக்கு இரண்டு மனைவிகள் கூட இருக்கலாம் என்பது ஜோதிடக் கருத்து.விட்டுக் கொடுத்துப் போகும் சுபாவம் அதிகம் காணப்படும்.இது ஆயுள் காரகரான சனி பகவானின் உச்ச வீடாக இருப்பதால் இவர்கள் பொதுவாகவே அதிக ஆயுள் பலத்தைப் பெற்று இருப்பார்கள்.இவர்களுடைய ஆயுள் பலம் சுப க்ரஹ பார்வைகள் இருப்பின் 85 வயது வரை எனலாம்.
2016 ஆம் ஆண்டிற்கான துலா ராசியின் பலாபலன்கள்
அன்பார்ந்த துலா ராசி அன்பர்களே இந்த ஆண்டு முழுவதுமே சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது அவருக்கு சிறப்பான இடம் அல்ல. தவறாக பேசி அதிக விரோதிகளை சம்பாதித்துக் கொள்ள நேரிடும். கொடுத்த வாக்கைக் கூட காப்பாற்ற இயலாமல் போகும். இன்னும் சொல்லப் போனால் இது ஏழரைச் சனியின் இறுதிக் கட்டம். அதனால் உங்களுக்கு சோதனைகள் அதிகமாக இருக்கும். எனினும், சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற கெட்ட பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதனால் கவலை வேண்டாம். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். கெட்டவன், கெடுவது நல்லது. அதன் படி உங்கள் ராசிக்கு கெடு பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு மிக சாதகமான நல்ல பலன்களைத் தரும். அதன் படி மேற்சொன்ன கெடு பலன்கள் கண்டிப்பாக உங்களுக்கு இந்தக் கால கட்டத்தில் மட்டும் சற்றே குறையும். எனினும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 4,8,11 ஆம் இடங்களைப் பார்ப்பதால் சிலருக்கு வீடு கட்டும் வாய்ப்பு உண்டு. அதனால் சுப விரயங்கள் அதிகம் இருக்கும்.
மற்றபடி 8.1.2016 அன்று நடக்கவிருக்கும் ராகு/ கேது பெயர்ச்சிகளை ஆராயும் போது ராகு பகவான் இதுவரையில் 12 ஆம் இடத்தில் அமர்ந்து விரயத்தை கொடுத்துக் கொண்டு இருந்தவர். இந்த ஆண்டு 11 ஆம் இடம் செல்கிறார். இதனால் எண்ணற்ற செலவுகள் வந்தாலும் உங்களது பொருளாதாரம் அதனை சமாளிக்கும் விதத்தில் இந்த ஆண்டு நல்ல நிலையில் இருக்கும். அதே சமயத்தில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்துக்கு செல்வதால் வீட்டை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பொருட்கள் திருடு போகாமல் பார்த்துக் கொள்ளவும். கல்வியில் மந்த நிலை தரும். வெளிநாடு செல்லும் யோகம் கூட சிலருக்கு தாமதம் ஆகலாம். ஆனால் கண்டிப்பாக வெளிநாடு போகும் வாய்ப்பு தாமதம் ஆனாலும் சிலருக்கு உண்டு.
அதுபோல குரு பகவானின் நிலையைப் பார்க்கும் போது, குரு பகவான் இந்த ஆண்டில் பெரும்பாலும் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். இதனால் வீண் செலவுகள் ஏற்படும். கையில் பணம் தங்காது. ஆனால் அனைத்துமே சுப விரயச் செலவுகலாகத் தான் இருக்கும். தவிர 12 ஆம் இடத்து குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு 4,6,8 ஆம் இடங்களைப் பார்ப்பதால் சிலர் புதிதாக வீடு கட்டி மகிழுவார்கள். ஆனால் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். வழக்குகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் நிலை சீராகத் தான் இருக்கும். அது பற்றிக் கவலை வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு
வேலைப் பளு அதிகமாகத் தான் இருக்கும். அலைச்சல் ஏற்படும். அதே சமயம் உழைப்புக்கு ஏற்ற வருமானம் உண்டு. சிலருக்கு வேண்டாத இடமாற்றங்கள் இந்த ஆண்டு நிகழும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரிகள்
வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு வளர்ச்சியான ஆண்டு தான். எதிர்பாராத லாபங்கள் வந்து உங்களை மகிழ்விக்கும். ஆனால் எதிரிகள் அதிகம் இருப்பார்கள். குருவால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். 2016 ஜூலைக்குப் பிறகு அதிக முதலீடுகளை தவிர்க்கவும்.
கலைஞர்களுக்கு
கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு சீரான ஆண்டாகத் தான் இருக்கும். தீவிர முயற்சிகளால் அனுகூலம் உண்டு. பண வரவில் எந்தக் குறையும் இருக்காது. பேச்சினால் புதிய விரோதங்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் சோதனைகள் நிறைந்த ஆண்டு தான். வியாழக்கிழமைகளில் சாய் பாபா போன்ற உத்தம மகான்களை வழிபாடு செய்து வாருங்கள். மற்றபடி ஞாபக மறதி அதிகம் இருக்கும். இந்தக் கல்வி ஆண்டில் விரும்பிய மேல் படிப்பு கிடைக்க பிரார்த்திக்கவும்.
விவசாயிகளுக்கு
விவாசாயிகளுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும். அதிக மகசூல் கிடைக்கும். அரசாங்க ஆதரவு இந்த ஆண்டு உங்களுக்கு உண்டு. எதிர்பார்த்த லாபங்களும் வந்து சேரும்.
பெண்களுக்கு
பெண்களுக்கு இந்த ஆண்டு ஒரு சுபமான ஆண்டு தான். ஆனால் கேதுவால் இடையில் கொஞ்சம் உடல் உபாதைகள் தரும். கல்வியில் கூட அக்கறை குறையும். இதற்கு அருகம்புல் சாற்றி விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். அவ்வாறு செய்தால் சோதனைகள் அகலும்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். அத்துடன் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வரவும்.
பொது
பெயரின் முதல் எழுத்துக்கள் Raa, Ree, Roo, Re, Ro, Taa, Tee, Too, Te
அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் வைரம்
ராசியான எண்கள் அல்லது தேதிகள் 5,15,23,2,11,20,29
வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ ரங்கப் பெருமாள்
ராசியான நிறம் பச்சை, வெள்ளை
ராசியான திக்கு வடமேற்கு, வடக்கு
ஆகாத நிறம் மஞ்சள், கருப்பு
பின் குறிப்பு
இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.
Discussion about this post