WhatsApp Channel
பைபிளை ஒருமுறை வாசித்தாலே போரடித்துவிடும், அங்கு யூத கதை யூத பெருமிதம் தவிர எதுவுமில்லை, சுற்றி சுற்றி யூத இனம் ஒன்றுக்குமான நூல் அது
பைபிளின் தொடக்கம் யூதரை சொல்கின்றது, வழியெங்கும் யூத பெருமைகளை வரலாறை சொல்கின்றது, முடிவில் யூதர்களே விண்ணகம் செல்வார்கள் அதுவும் இயேசுவினை நம்பிய யூதர்களே செல்வார்கள் அவர்களின் 12 குலத்தவரே செல்வார்கள் என முடிகின்றது
அங்கு எழும் கேள்விகள் ஏராளம்
வாழும் வரை இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன பக்கத்தை தாண்டி ஒரு அடி எடுத்துவைக்க விரும்பாத இயேசு மரித்து வந்தபின் உலகெல்லாம் நற்செய்தி பரவவேண்டும் என ஏன் சொன்னார் என்பது தெரியவில்லை
அவர் வாழும்போது சொன்னதைத்தான் பார்க்கவேண்டும் அவ்வகையில் அவர் யூதருக்காக மட்டும் வாழ்ந்திருகின்றார் போதித்திருக்கின்றார்
முத்தாய்ப்பாக அந்த மூன்று ஞானியர் இயேசு பிறந்தபோது பெத்தலகேமுக்கு வந்து இயேசுவினை கண்டபோது சொன்ன வார்த்தை கவனிக்கதக்கது
“யூதரின் ராஜா எங்கே?”
அதாவது அவர்கள் உலக மீட்பர், உலக ரட்சகர் எங்கே என கேட்கவில்லை மாறாக யூதரின் அரசன் எங்கே என்றுதான் கேட்டார்கள்
அவர் கொல்லப்படும் போது கூட அவரின் குற்றம் யூதரின் அரசன் இவன் என்றுதான் அறிவிக்க்கபட்டது
ஆக மேற்காசியாவில் யூதருக்காக வாழ்ந்து மரித்த ஒருவரை பற்றி அந்த இனத்தின் பெருமையினை பற்றி ஏன் திரும்ப திரும்ப படிக்கவேண்டும் என லிவிஸ்டனுக்கு அறிவு வந்திருக்கலாம்
ஒரு இனத்துக்குமான தெய்வமாக மட்டும் ஒரு கடவுள் இருக்கமுடியாது, அப்படி இருந்தால் அவர் கடவுளே அல்ல எனும் தெளிவுவந்திருக்கலாம்
ஒரு தாய் எப்படி இவன் தன்மகன் அவன் பிறமகன் என பிரித்து பார்க்கமாட்டோளோ, அப்படி ஒரு தெய்வம் இவன் என்மகன் மற்றவரெல்லாம் பிற இனம் பாவி இனம் என சொல்லியிருக்க முடியாது என அவர் தெளிந்திருக்கலாம்
கிணற்றில் இருந்து வெளிவந்து கங்கையினை கண்டுகொண்டிருகின்றார் லிவிங்க்ஸ்டன், அவரின் கண்கள் திறக்கபட்டிருக்கின்றது
மதம் என்பது இறைவனை அடைய செய்வது உணர செய்வது, அதாவது இறைவனை உணரவைக்கும் ஒரு வழி
அந்த கடலுக்கு போக ஆயிரமாயிரம் வழிகள் உண்டு, இந்துமதத்தில் ஏகபட்ட வழிகள் உண்டு, இந்நாட்டின் அடையாளமே ஆன்மீகம்தான்
ஆக கங்கை இருக்கும் போது ஜோர்டான் ஓடையினை தேடுவது அறிவுடமை அல்ல
ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்திருக்கின்றார், கிறிஸ்தவம் போல் அல்லாமல் இந்துமதத்தில் அவர் படிக்க ஒருகோடி நூல்கள் உண்டு
பின்பற்ற ஓராயிரம் வழிகள் உண்டு, எல்லா கேள்விக்கும் ஆயிரமாயிரம் பதிலும் உண்டு
அதை ஒருபிறவியில் படிக்கமுடியாது முடிந்தவரை அவர் அந்த கடலில் முத்தெடுக்கட்டும், மனம் திரும்பிய அவருக்கு வாழ்த்துக்கள்
சிவாய நம
இதுதான் இன்றைய “நற்செய்தி”
Discussion about this post