WhatsApp Channel
அதிமுகவை பிளவுபடுத்தும் டெல்லி பாஜகவின் சதியால் உஷாரான அதிமுகவின் இரு மூத்த தலைவர்களின் துணையுடன் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்தார். மக்களவைத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளைக் கேட்டதும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்தப் பிரச்னை தீவிரமடைந்தது.
கூட்டணி முறிவு அறிவிப்பு: இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவிக்குமாறு மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். அதன்பிறகு சில சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அண்ணாமலை தரப்பு இறங்கவில்லை.
பா.ஜ.,வின் குரலாக இரு தலைவர்கள்: இந்நிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த இரு தலைவர்கள், கேரளா, கொச்சிக்கு ரகசியமாக சென்று, அங்கிருந்து டில்லி செல்ல திட்டமிட்டிருந்தனர். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சீட் கொடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வில் குரல் கொடுத்து வரும் இவர்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் இரு தலைவர்களும் திடீரென டெல்லி செல்வது தெரியவந்தது.
உடனடியாக டெல்லிக்கு தூதர்களை அனுப்பிய எடப்பாடி: மேலும் சில தலைவர்கள் டெல்லி சென்று தனக்கும், அ.தி.மு.க.வுக்கும் எதிராக ஏதாவது சதி செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்ததால், எடப்பாடி பழனிசாமி அவர்களை உடனடியாக டெல்லிக்கு அனுப்பி வைத்தார். டெல்லியில் இரு தலைவர்களும் தங்க திட்டமிட்டிருந்த அதே விடுதியில் எடப்பாடி பழனிசாமியும் தனது தூதர்களை தங்க வைத்தார்.
சதி திட்டம் உடைந்தது..: இதனால், தாங்கள் கொண்டு வந்த சதி திட்டத்தை நிறைவேற்ற முடியாமல், எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஜே.பி.நட்டாவை சந்திக்க வேண்டிய நெருக்கடியை, தலைவர்கள் சந்தித்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக ஒருபோதும் முறித்துக் கொள்ளக் கூடாது என்று இந்த இரு தலைவர்களும் திட்டவட்டமாக வலியுறுத்தி வந்தனர்.
சதியை முறியடித்த எடப்பாடி பழனிசாமி: ஆனால், இந்த இரு தலைவர்களின் சதித் திட்டங்களை அறிந்த எடப்பாடி பழனிசாமி, சலசலப்பு ஏற்படக்கூடாது என அமைதி காத்தார். இன்றைய அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த இரு தலைவர்களும் பாஜக கூட்டணி வேண்டும் என்ற தொனியில் பேசினாலும் எடப்பாடி பழனிசாமி அமைதியாகவே இருந்தார். ஆனால் கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகளின் முடிவின் அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில்லை என எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அதிமுகவை உடைக்கும் பாஜக சதியை எடப்பாடி பழனிசாமி முறியடித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post