WhatsApp Channel
என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு ஈரோடு மாவட்டத்தில் விளைந்த சிறப்பு மஞ்சளால் மாலை அணிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு கைத்தறி துண்டு அணிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்ச்சி திருப்பூர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று நடைபெற்றது.
இதில் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதால், இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு ஆயிரக்கணக்கானோர் மாலை அணிவித்தனர். நீலகிரி மாவட்ட மக்கள் கையால் நெய்யப்பட்ட துண்டை அணிந்து பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாலை அணிவித்ததாக பா.ஜ.க.
Discussion about this post