WhatsApp Channel
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும், தேர்தல் ஆணையம் எங்களுக்கு சின்னத்தை ஒதுக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வில் சேர, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்பு எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் போட்டியிடுவோம் என்று வலியுறுத்தி வருகிறார்.
ஓ.பி.எஸ்-க்கு அதிகாரம்: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதை முடிவு செய்ய ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் அளித்து இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என்று அறிவித்தார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ். மீண்டும் 3வது முறையாக பாஜக கூட்டணியில் தொடர்கிறோம்.பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தாமரை சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபற்றி பிறகு பேசுவோம் என்று மழுப்பலாக பதிலளித்தார். பிரதமர் மோடியை மார்ச் 4-ம் தேதி சென்னை வரும்போது சந்திப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, பிறகு பார்ப்போம் என்று ஓபிஎஸ் பதிலளித்தார்.
தாமரை சின்னமா, இரட்டை இலையா?: தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த தேர்தலுக்காகத்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிக தீர்வாக இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. விரைவில் நல்ல முடிவு வரும்.இரட்டை இலை சின்னத்தில் நிச்சயம் நிற்போம்.
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததால் திமுகவுக்கு தோல்வியைத் தேடித்தரும் நல்ல நோக்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வேண்டுகோளின்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது வேட்பாளரை வாபஸ் பெற்றோம். ஆனால் கொங்கு மண்டலத்திலேயே தோல்வியை சந்தித்தோம். அதன் விளைவு எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்கவில்லை.
லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனை அணுகுவோம். விரைவில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.
Discussion about this post