WhatsApp Channel
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது. காலை முதல் 4 கார்களில் 8க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அவர்கள் அளித்த தகவலின்படி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 2021-ம் ஆண்டு நடந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post