WhatsApp Channel
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தூதரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய ரகசிய செய்தி கசிந்தது குறித்து அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் டொனால்ட் லூ நாடாளுமன்றக் குழுவிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக அவர் கூறினார். எனினும், என்ன மாதிரியான முறைகேடுகள் நடந்தன என்பதை விரிவாகக் கூறாமல், தேர்தல் மோசடி புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் தொடர்பான வன்முறைகள், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள், ஊடக பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வாக்களிக்கும் போது இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையின் கண்டனத்தையும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தானுடன் 76 வருட நட்புறவு உள்ளது. “பாகிஸ்தானுக்கு அதன் சொந்த அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கு ஒரு ஜனநாயக செயல்முறை இல்லை என்றால், அது எங்கள் இரு நாடுகளின் உறவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்” என்று வெளியுறவுத்துறை துணை செயலாளர் டொனால்ட் லூ எச்சரித்தார்.
Discussion about this post