WhatsApp Channel
தேமுதிகவுக்கு ராஜ்யசபா தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 இடங்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்திட்டனர்.
ராஜ்யசபா சீட்: தேமுதிக தரப்பில், ராஜ்யசபா சீட் வேண்டும் என, அ.தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து நேற்று பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று பேசினார். ஆனால், இட ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் ராஜ்யசபா சீட் குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
பிரேமலதா – ராஜ்யசபா சீட்: பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த். ராஜ்யசபா சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்திடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, கிண்டலாக பதிலளித்தார் பிரேமலதா. வெற்றியை உறுதி செய்துவிட்டோம், தேதி மட்டும் பின்னர் அறிவிக்கப்படும், அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும், விரைவில் அறிவிப்போம் என பிரேமலதா கூறினார்.
பத்திரிக்கையாளர்களிடம் எல்லாம் உடனே சொல்ல முடியது. ஏன் அவசரம்? ராஜ்யசபா எம்.பி., சீட் கன்பார்ம் ஆயிடுச்சுன்னு சொன்னேன். ராஜ்யசபா எம்பி யார் என்பது அறிவிக்கப்படும். பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.
எடப்பாடி சம்மதம்: தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கசிந்துள்ளது. 2025க்கு பதிலாக 2026ல் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவிக்கு தேமுதிகவுக்கு ஒரு இடத்தை அதிமுக தரப்போவதாக கூறப்படுகிறது.
2026 சட்டசபை தேர்தலிலும் தேமுதிக-அதிமுக கூட்டணி தொடரும் என பிரேமலதா விஜயகாந்த் நேற்று தெரிவித்திருந்தார். இந்த கூட்டணி 2026 சட்டசபை தேர்தல் வரை உறுதியாகிவிட்டதாகவும், அதன்படி அதிமுக சார்பில் ராஜ்யசபாவில் தே.மு.தி.க.வுக்கு சீட் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எல்.கே.சுதீஷுக்கு வாய்ப்பு: தேமுதிகவில் இருந்து யாரும் பார்லிமென்ட் சென்றதில்லை. இந்நிலையில் ராஜ்யசபா சீட்டை தேமுதிக உறுதி செய்துள்ளது. பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா எம்.பி. சுதீஷ் போட்டியிட விரும்பிய கள்ளக்குறிச்சி தொகுதி இம்முறை தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதன் மூலம் சுதீஷ் ராஜ்யசபா எம்பி ஆவது உறுதி என தகவல் பரவி வருகிறது.
Discussion about this post