WhatsApp Channel
பா.ஜனதா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளுக்கான சீட் ஒதுக்கீடு முடிவடைந்த நிலையில், தமாகா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு மட்டும் இன்னும் சீட் இறுதி செய்யப்படவில்லை; தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது அமைப்பின் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அமமுகவுக்கு 2 இடங்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் ஆகியோருக்கு சீட் ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தல் மூன்று முனைப் போட்டி. பாஜக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி என மூன்று முனைப் போட்டி நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலில் பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இதில், பெரிய கட்சியாக பா.ம.கவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தெந்த இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன், மூத்த பொறுப்பாளர் அரவிந்த மேனன் உள்ளிட்டோர் கமலாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு வேலூர் தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதேபோல், பாஜக தலைவர்கள், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த தொகுதி என்பதை அறிவிக்கவில்லை.
இதையடுத்து, பாஜகவின் தேர்தல் குழுவுடன் த.மா.கா சார்பில் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார். ஆனால் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சீட் பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்க ஜி.கே.வாசன் திட்டமிட்டுள்ளார். இந்திய மக்கள் கல்வி மேம்பாட்டுக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவ், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை. இரு கட்சிகளும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
அடுத்து பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐஜேகே) இடம் ஒதுக்கப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஐ.ஜே.கே. தலைவர் ரவிபச்சமுத்து கையெழுத்திட்டார். பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிகிறது.
இதேபோல் பாஜக தேர்தல் பணிக்குழு தலைவர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனையில் பா.ஜனதா ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும், ஓபிஎஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் பா.ஜனதா கட்சி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘சமூகமாக பேச்சுவார்த்தை நடந்தது. மாவட்ட செயலாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) அவசர கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு போட்டியிடும் சின்னம் குறித்து தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்’’ என்றார்.
Discussion about this post