WhatsApp Channel
உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று அகமதாபாத்தில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாமும் அப்துல்லாவும் களம் இறங்கினார்கள். 20 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லா ஆட்டமிழந்தார்.
அதன்பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இமாமுடன் ஜோடி சேர்ந்தார். இதில் இமாம் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் பின்னர் பாபர் ஆசாமுடன் இணைந்தார். இருவரும் நிதானத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களம் இறங்கிய ஷகீல் 6 ரன்களும், இப்திகார் அகமது 4 ரன்களும், ஷதாப் கான் 2 ரன்களும், மறுமுனையில் நின்ற ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்து ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆனார்கள். இந்த தொடர் விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணி தடுமாறியது. பின்னர் நவாஸ் மற்றும் ஹசன் அலி இணைந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அடுத்த 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தனது எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறப்பான பேட்டிங் விக்கெட்டில் கிடைத்த வாய்ப்பை அவர்கள் வீணடித்தனர். ஏமாற்றம் மிகவும் ஏமாற்றம். என பதிவிடப்பட்டது
Discussion about this post