WhatsApp Channel
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டத்தில் லக்னோவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மான் கில் களமிறங்கினர். சப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல், ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், ரோகித் சர்மா மறுபுறம் நிலைத்து நின்றார்.
அவருடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. இது மதிப்பெண்ணை அதிகமாக்கியது. ரோகித் சர்மா 66 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 80 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடில் ரஷித் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜடேஜா 8 ரன்னிலும், முகமது ஷமி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 183 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
Discussion about this post