WhatsApp Channel
உலக கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
13வது உலக கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதில் கலந்து கொண்ட இலங்கை அணி 7 போட்டிகளில் விளையாடி 5ல் தோல்வி, 2ல் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் சரிந்து மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இலங்கை அணிக்கு அந்நாட்டு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடர் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தை கலைத்து இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவராக அர்ஜூன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஊழல், நிதி முறைகேடு, சூதாட்டம், வீரர்களின் சீர்கேடு போன்றவற்றை மேற்கோள் காட்டி இலங்கை அமைச்சர் ஐசிசிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post