WhatsApp Channel
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 12ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 12ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. எனவே அன்றைய தினம் சஹஸ்ர தீப அலங்கார சேவை தவிர அனைத்து கட்டண சேவைகளையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
வரும் 12ம் தேதி தீபாவளி அன்று காலை 7:00 மணிக்கு ஏழுமலையான் கோவில் தங்கவாசல் அருகே ஏழுமலையானின் தீபாராதனை (தர்பார்) நடக்கிறது.
ஆஸ்தானத்தின் முன், உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோயிலில் தங்கவாசல் எதிரே உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருளுவார். இதனுடன் ஏழுமலையானின் தளபதியும் அங்கு எழுந்தருளுவார்.
பக்தர்களுக்கு சிறப்பு பூஜைகளுடன் ஆஸ்தானம் (தர்பார்) நடைபெறுகிறது. ஆஸ்தானத்தை முன்னிட்டு அன்று மாலை திருப்பதி மலையில் நடைபெறும் சஹஸ்ர தீப அமங்கார சேவை தவிர அனைத்து கட்டண சேவைகளையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
Discussion about this post