WhatsApp Channel
உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் இந்திய வீரருக்கு பிசிசிஐயால் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்பின் பேட் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.
இந்திய தரப்பில் விராட் கோலி சதம் (101 ரன்கள்), ஷ்ரேயாஸ் அரை சதம் (77 ரன்கள்) எடுத்தனர். அதன்பின் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது.
இதில் இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ தங்கப் பதக்கத்தை வழங்கும். அதன்படி நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேப்டன்ஷிப்பில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் தேர்வு செய்யப்பட்டார். முந்தைய போட்டியில் சிறந்த ஃபீல்டர் விருதை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
Discussion about this post