WhatsApp Channel
சத்தீஸ்கர் மாநிலம் மிசோரமில் வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் சதீஷ்கரின் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில்,
சத்தீஸ்கர் மாநிலம் மிசோரமில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா. முதற்கட்ட சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து இந்த விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதல்முறையாக வாக்களித்த மாநிலத்தின் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள். இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தி ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்.
Discussion about this post