WhatsApp Channel
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வி.வேலு வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வி.வேலு வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.வி.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் ஏ.வி.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் அமைச்சர் ஏ.வி.வேலு சம்பந்தப்பட்ட இடங்களில் 5வது நாளாக இன்றும் வருமான வரித்துறையின் சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் ஏ.வி.வேலுவின் மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை. சோதனை முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? போன்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு அமைச்சர் ஏ.வி.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Discussion about this post