WhatsApp Channel
கருக்கலைப்பு மாத்திரையை உட்கொண்ட 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி (கூலித்தொழிலாளி). இவரது மனைவி ரமணா. இவர்களுக்கு தரணி என்ற மகளும், ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ரமணா கர்ப்பமானார். ரமணா 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்ததால் 3வது குழந்தை தேவையில்லை என நினைத்தார். கர்ப்பத்தை கலைக்க அங்குள்ள மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. ரமணாவுக்கு ரத்தம் கொட்டியது.
உடனே அவரது உறவினர்கள் ரமணாவை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதிகளவு மாத்திரை சாப்பிட்டதால் குழந்தை வயிற்றில் இறந்து கிடந்தது. உடனடியாக ஆபரேஷன் மூலம் குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். இதற்கிடையே ரமணாவுக்கு தொடர்ந்து ரத்தம் கொட்டியதால், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரமணா பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், ஓய்வு பெற்ற பெண் மருத்துவர் தேன்மொழி, செவிலியர் சக்திதேவி, உதவியாளர் வெட்டிச்செல்வி ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post