WhatsApp Channel
இந்த மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலத்தில் 7 மசோதாக்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கிடப்பில் போட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது, 7 மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி வழங்காமல் நிலுவையில் உள்ளதாக பஞ்சாப் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் பேசிய தலைமை நீதிபதி, ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு அதை ஆய்வு செய்து அதுவரை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
அப்போது, மசோதா நிலுவையில் உள்ளதற்கான காரணத்தை அரசிடம் பகிர்ந்து கொள்வதாக கவர்னர் தெரிவித்தார். இறுதியில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் ஆளுநருக்கு உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாகக் கூறி தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post