WhatsApp Channel
காரில் இருந்த 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்த 4 வயது சிறுமி மீட்கப்பட்டார்.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்திற்குள் கடந்த 4ம் தேதி மர்ம நபர் ஒருவர் வாகனம் ஓட்டினார். திடீரென கையில் இருந்த துப்பாக்கியை உயர்த்தி 2 முறை வானத்தை நோக்கி சுட்டார். காரில் இருந்த 2 எரியும் பாட்டில்களை எடுத்து வீசினார்.
இதனால் அந்த பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அலறியடித்து ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். இதில், பாதுகாப்புப் பகுதியை உடைத்து வாகனம் சென்றதும், காரில் 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அனைத்து முனையங்களிலும் கதவுகள் அடைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் விமான நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன், அவரது மனைவி போலீஸைத் தொடர்பு கொண்டு, அந்த நபர் எனது மகளைக் கடத்திச் செல்வதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹம்பர்க் காவல்துறை வெளியிட்ட X சமூக ஊடகப் பதிவில், காரில் இருந்த 35 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்த 4 வயது சிறுமி மீட்கப்பட்டார். சிறுமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது நடவடிக்கையின் போது குறித்த நபர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post