WhatsApp Channel
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் மோதும் 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் கெய்க்வாத்துடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய கெய்க்வாட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ரிங்கு சிங்குடன் ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டினர். அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அக்சர் படேல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ரிங்கு சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதன்பின் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.
Discussion about this post