WhatsApp Channel
இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் தனியாக சென்று அணியில் இணைவார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி பெங்களூருவில் இருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 20 ஓவர் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருத்ராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் உள்ளிட்ட 20 ஓவர் மற்றும் ஒருநாள் வீரர்கள் சென்றனர். அதன்பின் டெஸ்ட் அணி வீரர்கள் தனியாக சென்று அணியில் இணைவார்கள்.
Discussion about this post