WhatsApp Channel
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார்.
17வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இந்த தொடரில், புதிய கேப்டன் சுப்மான் கில் தலைமையில், முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. ஹர்திக் பாண்டியா மும்பைக்குத் தாவியுள்ள நிலையில், காயம் காரணமாக முகமது ஷமியும் ஆட்டத்தில் இருந்து விலகுவது குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவாகும். ஏனென்றால், கடந்த ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை வென்றார், மேலும் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாகப் பந்துவீசி இந்தியா இறுதிப் போட்டிக்கு வர முக்கிய காரணமாக ஆனார்.
அவர் சிறிய காயத்துடன் உலகக் கோப்பையில் விளையாடினார், இதனால் அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஐபிஎல் 2024 தொடரில் இருந்து அவர் இன்னும் மீளாததால், அதிலிருந்து விலகுவதாக குஜராத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக வீரர் சந்தீப் வாரியருக்கு பதிலாக ஷமி ரூ. 50 லட்சத்துக்கு குஜராத் அணி நிர்வாகம் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
Discussion about this post