WhatsApp Channel
கன்யாகுமரி நாகர்கோவில் வாத்தியார்விளை தரைத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கு மசூதி கட்டும் பணி நடந்தபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று, கட்டுமான பணிக்கான பொருட்கள் வந்ததால், மறியலில் ஈடுபட அங்கு திரண்டனர்.
மேலும் வாத்தியார்விளை நகர தலைவர் வைகுண்டமணி தலைமையில் இந்து முன்னணி, விசுவ இந்து பாரிஸ் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வடசேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை சமரசம் செய்த துணை கண்காணிப்பாளர் நவீன்குமார், கட்டுமான பணிகள் குறித்து நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார். அதுவரை பணிகள் நடைபெறாது என்றார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று கிராம தலைவர் வைகுண்டாமணி தலைமையில் ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் கட்ட ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்கள் நேற்று இரவு வந்து சேர்ந்தது. இச்செயற்பாடுகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் தடை விதிக்கக் கோரி ஏராளமானோர் திரண்டதால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பதற்றத்தை தணிக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
Discussion about this post