WhatsApp Channel
அதிமுக – பாஜக இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த பனிப்போர் நேற்று இறுதிகட்டத்தை எட்டியது. இதையடுத்து பாரதிய ஜனதாவை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றதையடுத்து அதிமுக-பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது. அண்ணாவை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தது அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும், பாஜக மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் 5 பேர் கொண்ட குழு, டில்லி தலைமையை சந்தித்து, அண்ணாமலையை மாற்றினால், ஒன்றாக, பார்லிமென்ட் தேர்தலை சந்திக்கலாம் என, பரிந்துரைத்ததால், அமைதி பேச்சு வார்த்தையை நிராகரித்து, பா.ஜ., தலைமை, தமிழகம் திரும்பியது.
நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவுடன் இன்று கூட்டணி இல்லை: என்றென்றும் இல்லை என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். இந்த முடிவால், சரியான முடிவை எடுத்த அதிமுகவுக்கு கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை அமைதியாக இருங்கள், நமது தேசிய தலைவர்கள் விரைவில் பதிலளிப்பார்கள் என்றார். பாஜக தலைமை இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாததால், வரும் தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி குறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுக தலைமை இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, “பொது இடங்களில் பாஜகவை விமர்சிக்கக் கூடாது என்றும், தலைமை அனுமதித்தவர்களைத் தவிர யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு, புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தாலும், தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ளும் கவலையில் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கிறார் எடப்பாடியார்.
அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு கிடைத்தால், தி.மு.க.,வை அடுத்து, அ.தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள், அமலாக்கத் துறையிடம் சிக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, 2024 தேர்தலுக்கு முன் அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஏற்கனவே கொடநாடு வழக்கு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு, நிலுவையில் உள்ள ஊழல் வழக்கில் இருந்து தங்கமணி, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட பல தலைவர்கள் வெளியே வர வாய்ப்புள்ளது. எனவே அடுத்த ஆப்பு அதிமுகவுக்கு தான் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post