WhatsApp Channel
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக முடிவு செய்துள்ளதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் பாஜக கடும் அதிருப்தியும், கவலையும் அடையும் என அதிமுகவினர் கணக்கிட்டிருந்த நிலையில் வேறு மாதிரியான சம்பவம் களத்தில் அரங்கேறி வருகிறது.
பாஜக-அதிமுக கூட்டணி விலகுவதாக அதிமுக சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதன் எதிரொலியாக நேற்றிரவு திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் ரோடு பள்ளி பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டம் நடத்தினர்.இதன் எதிரொலியாக பா.ஜ.க வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறுகையில், அதிமுக கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு போட்டியாக இல்லாமல், பா.ஜ., தனித்து நிற்க தயாராக உள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் வீதியுலா பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். எதையும் எதிர்கொள்ளும் என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்டதாகவும், திராவிடக் கட்சிகளை சொந்தக் காலில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கிராமம் தோறும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
கூட்டணியில் இருந்து வெளியேறினால், பா.ஜ.,வினர் கவலைப்படுவார்கள் என, அ.தி.மு.க.,வினர் எதிர்பார்த்த நிலையில், இரவோடு இரவாக, கிராமம் முதல் நகரம் வரை, பா.ஜ.,வினர் வெடி வைத்து கொண்டாடிய சம்பவம், அ.தி.மு.க., முன்னணி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post