WhatsApp Channel
வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
வடமேற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒடிசாவின் வட மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post