WhatsApp Channel
மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தபடி ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன் (செப்.30) முடிவடைகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு ரூ. 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் 2வது நடவடிக்கையாக 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
2,000 ரூபாய் நோட்டுகளை எந்த படிவமோ, அடையாள அட்டையோ இல்லாமல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
அதன்படி, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெற அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன் (செப்.30) முடிவடைகிறது.
எனவே ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் இன்றும் நாளையும் வங்கிகளுக்குச் சென்று மாற்றிக் கொள்ள வேண்டும்.
செப்டம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.32 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் 93 சதவீதம் வாபஸ் பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
Discussion about this post