WhatsApp Channel
வரும் 28ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் நீடிக்கும். இந்த பருவமழை மூலம் தமிழகம் கனமழை பெறும். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முற்றிலும் முடிந்து வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இதனிடையே வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வரும் 28ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post