WhatsApp Channel
10 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கன்யாகுமரி மாவட்டத்தின் சிறப்பு சுற்றுலாத்தலங்களில் ஒன்று, ‘கன்யாகுமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி. இந்த அருவிக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கன்யாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கன்யாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை குறைந்ததால் அருவிக்கு தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால், 10 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே தொடர் விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
Discussion about this post