WhatsApp Channel
அரபிக்கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் இன்று மிக தீவிர புயலாக உருவெடுத்துள்ளது.
19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றைய தினம் நள்ளிரவில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடலில் புயலாக உருவானது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘தேஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புயல் நேற்று தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயல் தீவிர புயலாக மாறி ஓமன் மற்றும் ஏமன் இடையே வரும் 25ம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தென்மேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள இந்த அதி தீவிர புயல் ‘தேஜ்’ இன்று வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இது நாளை அதிகாலை ஓமன் மற்றும் ஏமன் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post