WhatsApp Channel
விஜயகாந்த் மேலும் 14 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
உடல்நலக்குறைவால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நெஞ்சு சளி மற்றும் இருமலுக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரமாக விஜயகாந்தின் உடல்நிலை சீராகவில்லை என்றும், நுரையீரல் சிகிச்சைக்கு உதவி தேவை என்றும், விரைவில் பூரண நலம் பெறுவார் என்றும், மேலும் 14 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார். இதனிடையே விஜயகாந்த் விரைவில் குணமடைய பிரார்த்தித்து பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது X இணையதளத்தில் கூறியிருப்பதாவது, “தமிழக திரைப்பட முன்னணி நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அண்ணன் அவர்கள் சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.
கூடிய விரைவில் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார் மத்திய அமைச்சர் எல்.முருகன்.
Discussion about this post