WhatsApp Channel
அயோத்தி செல்லும் தமிழக புண்ணிய தீர்த்தங்கள்.. திருப்பரங்குன்றத்தில் தொட்டு வணங்கிய இஸ்லாமிய சகோதரர்கள்
தமிழ்நாட்டில் உள்ள புண்ணிய நதிகள் மற்றும் ஓடைகளில் இருந்து எடுக்கப்படும் புனித தீர்த்தங்கள் கும்பாபிஷேகத்திற்காக அயோத்தி கோவிலுக்கு அனுப்பப்படுகின்றன. திருப்பரங்குன்றம் மலையில் இருந்து எடுக்கப்பட்ட புனித தீர்த்தத்தை இஸ்லாமிய சகோதரர்கள் தொட்டு வணங்கி அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்ட கோவில்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. 54,700 சதுர அடி பரப்பளவும், 360 அடி நீளமும், 235 அடி அகலமும், தரையிலிருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இக்கோயில் ஐந்து குவிமாடங்கள் மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்: தரை தளத்தில் 160 தூண்கள், முதல் தளத்தில் 132 தூண்கள் மற்றும் இரண்டாவது தளத்தில் 74 தூண்கள். 12 நுழைவு வாயில்கள் கொண்ட இந்த கோவிலின் கோபுரம் 161 அடி. புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து கோவிலை பாதுகாக்கும் வகையில், கோவிலை சுற்றி மூன்று அடுக்குகளாக மரம் வளர்ப்பு, நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பிரமாண்ட கோவில் இதுவாகும்.
அயோத்தி அறக்கட்டளை: இக்கோயில் கட்டுவதற்கான திட்டச் செலவு 1700 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டாலும், ஸ்ரீராம பக்தர்களிடமிருந்து மட்டும் 3400 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அயோத்தியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
பாலா ராம்: ஜூன் 1, 2022 அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த குழந்தை ராமர் கோயிலின் கருவறைக்கு அடிக்கல் நாட்டினார். குழந்தை ராமர் கோயிலுக்கான கருவறை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கிரானைட் கற்களால் ஆனது. கீழ் தளத்தில் உள்ள இந்த கருவறையில் தான் ராமர் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார்.
அயோத்தி தயார்: மூலவர் ராம லல்லா என்று அழைக்கப்படுகிறது. ராம் லல்லா என்றால் குழந்தை ராமர் அல்லது பால ராமர். இந்த ராம ஜென்மபூமியில் உள்ள இந்தக் கோயிலை நிறுவியவர் குழந்தை ராமர். ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
கும்பாபிஷேகம்: பொதுவாக கும்பாபிஷேகத்திற்கு புனித நதிகள் மற்றும் ஓடைகளில் இருந்து புனித நீர் எடுக்கப்படுகிறது. இந்த புனித நீரால் கும்பாபிஷேக நாளில் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெறும். அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு வருகின்றனர்.
தமிழக தீர்த்தங்கள்: தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் கடலில் இருந்து சிறு குடங்களில் புனித நீரை எடுத்து அயோத்திக்கு அனுப்பும் பணியை விஸ்வ இந்து அமைப்பினர் நடத்தினர். சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரியில் மூன்று சமுத்திரங்கள் சங்கமிக்கும் இடத்தில், காலை பூஜைக்கு பின் ஐந்து சிறிய வெள்ளி குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டது.
சிறப்பு பூஜைகள்: பின்னர் ஐந்து கலசங்களில் எடுக்கப்பட்ட புனிதநீர் கடற்கரை பகுதியில் இருந்து பகவதிம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் பகவதியம்மன் சன்னிதானத்தில் புனிதநீர் அடங்கிய 5 குடங்கள் வைத்து அர்ச்சனை செய்தனர். இந்த புனித நீர் குடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டு பிளைவுட் பெட்டியில் வைக்கப்பட்டு தொடர் வண்டியில் பார்சல் மூலம் அயோத்திக்கு அனுப்பப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
குற்றாலம்: காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று அருவிகளில் இருந்து எடுக்கப்பட்ட புனித தீர்த்தத்தை கலசத்தில் பொதித்து அயோத்திக்கு அனுப்பி வைத்து சிறப்பு பூஜை நடந்தது. குற்றாலம் விவேகானந்தா ஆசிரம சுவாமி அகிலாண்ட மகராஜ் ஆசியுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் பாஜக விஎச்பி இந்து முன்னணியின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் ரத வீதி வழியாக பஜனை நடத்தப்பட்டு புனிதநீர் அயோத்திக்கு அனுப்பப்பட்டது.
திருப்பரங்குன்றம் : இதற்கிடையே, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் தீர்த்தம் எடுக்க, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் போலீசாரிடம், பா.ஜ.,வினர் அனுமதி கோரியிருந்தனர். மலையில் உள்ள சிக்கந்தர் சமாதி வழியாக புனித யாத்திரை மேற்கொள்வதாக கூறியதால் போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பா.ஜ.,வினர் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் போலீசாரை தொடர்பு கொண்டு அனுமதி கோரினர்.
கும்பிட்டு வாழ்த்து தெரிவித்த முஸ்லிம்கள்: திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தீர்த்தம் எடுக்க இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, போலீஸ் உதவியுடன் மலைக்கு சென்ற பாஜகவினர், சிவாச்சாரியார்கள் கலசத்தில் தீர்த்தம் எடுத்துக்கொண்டிருந்தனர். சிக்கந்தர் பாதுஷா சமாதி அருகே வந்ததும், அங்கு வந்திருந்த கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் புனித தீர்த்த கலசத்தை தொட்டு வாழ்த்து தெரிவித்தனர். இது அங்கிருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
புனித நாடி தீர்த்தங்கள் வருகை: ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்கள் கடந்த 30 ஆண்டுகளாக அனுப்பப்பட்டுள்ளன.
இந்த செங்கற்கள் வழிபட்டு ராமர் கோவில் கட்ட பயன்படுத்தப்பட்டன. இப்போது நாடு முழுவதும் உள்ள புண்ணிய நதிகளில் இருந்து புனித தீர்த்தம் எடுக்கப்பட்டு, கும்பிஷேகத்திற்காக அயோத்திக்கு வர உள்ளது.
Discussion about this post