WhatsApp Channel
மாவட்ட நீதிமன்றங்களில் வரும் 5ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்துவது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 5ம் தேதி முதல் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடத்த தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வசதியை மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post