WhatsApp Channel
ஜார்க்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், ஐதராபாத்தில் இருந்து ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் ராஞ்சிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
நிலம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஹேமந்த் சோரன் கடந்த மாதம் 31ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜார்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்றார்.
பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சம்பய் சோரனுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இதன்படி ஜார்க்கண்ட் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், ஐதராபாத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) எம்எல்ஏக்கள் இன்று ராஞ்சிக்கு புறப்பட்டனர். ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்தம் 80 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
Discussion about this post