WhatsApp Channel
பிரதமர் மோடி தூத்துக்குடியில் தமிழில் வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கினார். தூத்துக்குடியில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
விழாவில் அமைச்சர் எல்.முருகன், மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார்.
17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடியில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
பல தசாப்தங்களாக கோரிக்கைகள் அனைத்தும் இப்போது நிறைவேற்றப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்ட அனைத்தும் தற்போது திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, நெல்லையை மையமாக வைத்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு சிறந்த வசதிகளை வழங்குவதே எங்கள் நோக்கம். ரயில்வே, சாலை மற்றும் கடல் திட்டங்கள் ஒன்றாக இன்று தொடங்கப்பட்டுள்ளன. அது தமிழகத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
மக்களின் சேவகனாக உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுகிறேன். தமிழ்நாட்டில் வாழும் என் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து 75 கலங்கரை விளக்கங்களும் சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன், அமைச்சர் ஏ.வி.வேலு, கனிமொழி எம்.பி. பங்கேற்றுள்ளனர்.
Discussion about this post