WhatsApp Channel
தமிழகத்தில் மத்திய அரசின் பல திட்டங்கள் மறைக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எத்தனை தடைகள் வந்தாலும், தடைகளை மீறி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதன்போது, ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ விண்வெளி ஏவுதளம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.7055.95 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இங்கு உள்நாட்டு கப்பல்களில் குறிப்பாக கப்பல்களில் பச்சை ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான எரிபொருள் மையம் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் முதன்முறையாக ரூ.1950 கோடியில் நிறுவப்படுகிறது.
தூத்துக்குடியில் ரூ.265.15 கோடி செலவில் மூன்றாவது வடக்கு நிலக்கரி தளத்தை இயந்திரமயமாக்கும் பணி தொடங்கப்பட்டது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உறவு வலுவடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் புதிய யுகங்களை உருவாக்கப் போகிறது. காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்தவை இன்று திட்டங்களாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலை வசதிக்காக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு நான் சொல்வது எனது தனிப்பட்ட கருத்தியல் அல்ல. வளர்ச்சி மற்றும் முன்னேற்றக் கோட்பாடு
இதை நான் இங்கு கூறும்போது தமிழகத்தில் உள்ள செய்தித்தாள்கள் வெளியிடாது. ஏனென்றால் இங்குள்ள அரசு அதை வெளியிடாது. ஆனால் நண்பர்களே, மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சிப் பயணம் முறியடிக்கப்படும்.
எங்களின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறேன். இது தமிழக மக்களுக்கு மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
Discussion about this post