WhatsApp Channel
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பேசிய மோடி, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி என்றார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக காணாமல் போய்விடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,””திருநெல்வேலி அல்வா போன்று நெல்லை மக்கள் மிகவும் இனிமையானவர்கள். நெல்லையப்பர் காந்திமதி அம்மன் நாட்டுக்காக உழைக்க அருள்பாலிக்க வேண்டும். புலித்தேவன், ஒண்டிவீரன், சுந்தரலிங்கனார், கெப்ளோடிய தமிழன் வஉசி உட்பட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை பெற்றெடுத்தது நெல்லை மண். வீரபாண்டிய கட்டபொம்மன்-
தோளோடு தோள் நின்று நடப்பவர்கள் தமிழர்கள். உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம். தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி பாஜக. உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் மரியாதையில் பெருமிதம் கொள்கிறார்கள். இதற்கு மத்திய அரசின் நடவடிக்கையே காரணம்.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மூலையில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும். தமிழக மக்களின் நம்பிக்கையாலும், விசுவாசத்தாலும் நாங்கள் ஆசி பெற்றுள்ளோம்.
பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழக மக்களுடன் இணக்கமாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது. மாற்று எரிசக்தி துறையில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.
தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி பாஜக. தமிழக மக்களின் நம்பிக்கையை பாஜக மீது வைத்திருப்போம். மத்திய அரசுக்கு ஒத்துழைக்காத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை கூறுகிறது. தமிழகத்தின் வளர்ச்சி பற்றி கேட்டால் தி.மு.க.விடம் பதில் இருக்காது.
எனக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனால் நான் தமிழ் மக்களை நேசிக்கிறேன். தமிழக மக்கள் சுயநலவாதிகளை புறக்கணிப்பார்கள். திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கியப் பதவிகளில் உள்ளனர். திமுகவும், காங்கிரஸும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி சம்பாதிக்க நினைக்கின்றன. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் திமுக காணாமல் போய்விடும். தமிழகத்தை திமுக சுரண்டுவது போல், இந்திய கூட்டணியை அமைத்து நாட்டை கொள்ளையடிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. சிலர் தங்கள் குடும்பத்தை உயர்த்த ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள்.
குடும்ப அரசியல் அதிகரித்து வருகிறது. எந்த திட்டமும் இல்லாத எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் யார் என்ற திட்டம் மட்டுமே அவர்களிடம் உள்ளது.
தமிழக மக்களின் ஒரே எண்ணம் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான். தமிழக மக்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும் என்று உறுதியளிக்கிறேன். தமிழக மக்கள் எதிர்காலம் குறித்து மிகவும் தெளிவாக உள்ளனர்.
நெல்லை மக்களின் ஆசியுடன் மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்கிறேன். நீங்கள் உழைக்கும் அளவுக்கு நானும் உங்களுக்காக உழைப்பேன், இது மோடி கொடுத்த உத்தரவாதம் என்றும் மோடி கூறினார்.
Discussion about this post