WhatsApp Channel
காஸா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் உலகில் உள்ள முஸ்லிம்களை யாராலும் தடுக்க முடியாது என இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அவர்கள் எல்லைக்குள் நுழைந்து பலரை பணயக்கைதிகளாக பிடித்துக் கொண்டனர். இதனையடுத்து இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டன.
பணயக்கைதிகளை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல் உள்ளிட்ட ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 11வது நாளாக வான், தரை மற்றும் கடல் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காஸாவில் இஸ்ரேலின் குற்றங்கள் தொடருமானால், உலகில் உள்ள முஸ்லிம்களையும், எதிர்ப்பு சக்திகளையும் யாராலும் தடுக்க முடியாது என ஈரான் அதிபர் அயதுல்லா அலி காமினி அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
காஸா மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 1979 இல் இஸ்லாமியப் புரட்சி தொடங்கியதில் இருந்து, ஈரான் ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
காஸாவைக் கட்டுப்படுத்தும் இஸ்லாமியக் குழுவான ஹமாஸுக்கு ஈரான் தனது ஆதரவு, நிதி மற்றும் ஆயுத ஆதரவை மறைக்கவில்லை.
இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியப் படைகளின் பதிலடியில் 2800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மீது மொத்தத் தடையையும் விதித்துள்ளது.
Discussion about this post