WhatsApp Channel
அக்டோபர் 7ஆம் தேதி முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காஸா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 11 பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் அமைப்பு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் கூறியதாவது:-
இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் 50 உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டன. 11 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். யுத்தம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற 2 ஊடகவியலாளர்களை காணவில்லை.
காஸா பகுதியில் மின் தடை மற்றும் இணையப் பிரச்சனை காரணமாக பத்திரிகையாளர்கள் சரியாக வேலை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். சமூக ஊடகங்களில் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் அச்சுறுத்துகிறது இந்த பிரச்சனையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.
இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post