WhatsApp Channel
பிரதமர் மோடிக்கு இந்தியா மற்றும் பூடான் மக்கள் தேசியக் கொடிகளை ஏற்றி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானுக்கு 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரதமர் மோடி நேற்று காலை பூடானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். பூடான் பிரதமர் செரிங் டோப் நேரில் சென்று அவரை வரவேற்றார்.
மேலும், இந்தியா மற்றும் பூடான் மக்கள் தங்கள் தேசியக் கொடிகளை ஏற்றி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி எழுதிய ‘கர்பா’ பாடலுக்கு பாரம்பரிய உடை அணிந்த நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இந்த நடனத்தை பிரதமர் மோடி பார்த்துவிட்டு நடன கலைஞர்களை பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடானின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ’ வழங்கப்பட்டது. இந்த விருதை பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் வழங்கினார். இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டு அரசு தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
இந்நிலையில், திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனையான ஜியால்ட்சன் ஜெட்சன் பெமா தாய்-செய் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
Discussion about this post